இது வரை இரத்தத்துக்கு மாற்று என்பதே இல்லை. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதொன்றாகும். பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த இரத்த மாற்று உடனடியாகப் பயன்படலாம். இதன் முதன்மை ஆய்வாளர் மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிக் பார்டியா(mic bardea) ஆவார்.
இது தொடர்பான செய்தி கடந்த ஞாயிறன்று நேச்சர் (Nature) என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், போன்ற கடும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் தமது சொந்தத் தோலில் இருந்தே தமக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் என Dr பார்டியா தெரிவித்தார்
தகவல் பெற உதவியவை
___________________________________________________________________________________-------------------------------------------------------------------------------------------------------------
பதிவில் ஓர் குறள்
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
உடையான் அரசருள் ஏறு.
கலைஞர் உரை:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
மு.வ உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
Translation:
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
Who owns them all, a lion lives amid the kings.
Explanation:
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
தகவலுக்கும் குறளுக்கும் மிக்க நன்றி...
நன்றி அண்ணா.....