இன்று இளைஞர்களின் நாயகன் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் 37வது பிறந்த நாள்..!
நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
சிறுவயதிலேயே நடனத்தை முறையாக கற்ற விஜய் தன் தந்தை இயக்கிய திரைப்படங்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் ஊடாக திரையுலகில் நுழைந்தார். 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன்(1985), சட்டம் ஒரு விளையாட்டு(1987) ஆகிய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
1992…. ரஜனி,கமல்,கார்த்திக்,பிரபு என திரையுலகில் சவாலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அப்போது நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய். ஆக்ஸன் திரைப்படத்தில் ஆரம்பித்த அவரின் திரையுலக வாழ்வு 1996ல் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நிலையான ஒரு இடத்தை பதித்துக்கொண்டது. தொடர்ந்து காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.
1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற ஆரம்பித்தார். 2000ம் ஆண்டில் வெளியான குஷி, ப்ரியமானவளே மற்றும் 2001ல் வெளியான ப்ரண்ஸ், பத்ரி ஆகிய திரைப்படங்களும் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கிச் சென்றன. அத்துடன் இக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களிலும் விஜய் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியமானவளே திரைப்படத்தில் “மிஸிஸி ஸிப்பி…” பாடலும் ப்ரண்ஸ் திரைப்படத்தில் “ருக்கு ருக்கு..” பாடலும் பத்ரி திரைப்படத்தின் “என்னோட லைலா..” பாடலும் பெரும் பிரபல்யமான பாடல்களாகும்.
பகவதி திரைப்படத்தின் மூலம் ஆக்ஸன் ஹீரோவாக மாறிய விஜய் கில்லி, திருமலை,திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என எதிரிகளை தன்னை வருத்தும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகளில் புரட்டி எடுத்தார்.. இந்நிலையில் 2007ல் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானது. பெரிதாக பெயர் பெறாவிட்டாலும் விஜய் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.
சில சடுதியான வீழ்ச்சிகளை தொடர்ந்து இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியாக காவலன் திரைப்படம் மீண்டும் அவரை ரசிகர்களின் காவலனாக மாற்றியது. சீன திரைப்பட விழாவில் பெரிதும் புகழை பெற்ற திரைப்படம் இளைய தளபதியை நீண்ட நாட்களின் பின் Soft Hero வாக மாற்றிவைத்தது.
விரைவில் வெளியாக உள்ள வேலாயுதம் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து வெளிவரவுள்ள நண்பன் திரைப்படமும் நிச்சயமாக பெரு வெற்றி பெறும் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்…உறுதியுமாகும்.
இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களில் ஒன்றான திருப்பாச்சி அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சச்சின், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கிலும் போக்கிரி ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திரைப்படமாக்கப்பட்டுள்ளன..
அத்தோடு ஏனைய மொழிகளில் வெளியாகிய படங்களையும் தமிழில் மொழிபெயர்த்து தருவதிலும் விஜய் பின்தங்கியதில்லை. இவ்வாறு வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். அவ்வாறு வெளியாகிய படங்கள் பற்றிய விபரங்கள் கீழே..
விஜயின் பாடகன் அவதாரம் 1994ல் தேவா திரைப்படத்தில் அரங்கேறியது. அத்திரைப்படத்தில் இரு பாடல்களை விஜய் பாடியிருந்தார். அதில் ஒரு பாடல் இதோ..
தொடர்ந்து “தொட்டப் பெட்டா..”(விஷ்ணு-1994), “பம்பாய் சிட்டி…”(கோயம்புத்துார் மாப்பிள்ளை-1995), 1996ல் “திருப்பதி போனா மொட்டை..”(மாண்புமிகு மாணவன்), “அஞ்சாம் நம்பர் பஸ்ஸிலேறி..”(காலமெல்லாம் காத்திருப்பேன்), “சிக்கன் கறி..”(செல்வா) ஆகிய பாடல்களையும் “ஊர்மிளா ஊர்மிளா..”(ஒன்ஸ்மோர்- 1997), “விழியில் விழி மோதி..”(காதலுக்கு மரியாதை- 1997) என்ற பாடல்களையும் பாடினார்.
1998ம் ஆண்டு இவரின் பாடகர் வரலாற்றின் பொற்காலம் எனலாம். ப்ரியமுடன் திரைப்படத்தின் “மௌரியா மெளரியா..” பாடலும் நிலாவே வா திரைப்படத்தில் அமைந்த “நிலவே நிலவே….”, “சந்திர மண்டலத்தை…” ஆகிய பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.
அத்துடன் வேறு ஒரு நடிகரின் திரைப்படத்தில் பாடும் பண்பையும் விஜய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் 1998ல் வேலை திரைப்படத்தில் காலத்துக்கு “ஒரு கன..” என்ற பாடலையும் பெரியண்ணா திரைப்படத்தில் “நான் தம் அடிக்கிற…” மற்றும் “ரோட்டுல ஒரு…” ஆகிய பாடல்களையும் துள்ளித்திரிந்த காலம் திரைப்படத்தின் “டிக் டிக் டிக்…”ஆகிய பாடல்களையும் இதற்கு சான்றாக கூறலாம்.
பின்னர் 1999ல் நெஞ்சினிலே திரைப்படத்தில் “தங்க நிறத்துக்குதான்..” பாடலையும் 2000ம் ஆண்டில் “இரவு பகலை…” “சின்னஞ் சிறு…”(கண்ணுக்குள் நிலவு) ஆகிய பாடல்களுடன் ப்ரியமானவளே திரைப்படத்தில் அமைந்த “மிஸிஸி ஸிப்பி..” பாடலையும் விஜய் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து 2001ல் பத்ரி திரைப்படத்தில் “என்னோட லைலா..” பாடலையும் 2002ல் ப்ரண்ட்ஸில் “ருக்கு ருக்கு..” பாடலையும், தமிழன் திரைப்படத்தில் “உள்ளத்தை கிள்ளாதே..” பாடலையும் பகவதியின் “கொக்ககோலா..” பாடலையும் விஜய் சிறப்பாக பாடியிருந்தார்.
இறுதியாக இவர் பாடிய திரைப்பட பாடல் 2005ல் வெளியான சச்சின் திரைப்படத்தின் “வாடி வாடி வாடி..” பாடலாகும்.
இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோள் விஜய் மீண்டும் திரைப்படத்தில் பாடவேண்டும் என்பதாகும். அது எப்போது நிறைவேறும் பொறுத்திருந்து பார்ப்போம்..
விஜய் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது பாடிய பாடல் இதோ..
விஜயின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்பாடல் வரிகளை அவரின் குரலிலேயே கூர்ந்து கவனியுங்கள்..
குறிப்புக்கள்..:-
* விஜயின் மொத்த திரைப்படங்களினதும் பாடல்களையும் இங்கே ஒரே தளத்தில் பெறலாம்..
விஜயின் குரலில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
1998ல் வெளியாகி ஹிட் ஆன நிலாவே வா திரைப்படத்தில் இடம் பெற்ற நிலவே நிலவே.. என்ற பாடலாகும்.
வேகமான பாடலாக ஆரம்பிக்கும் இப்பாடல் இடையில் மெதுவாக செல்வதும் பின் வேகமடைவதும் சூப்பர்.
காதலியின் பதிலை வேண்டி நிற்கும் இப்பாடலில் விஜயின் கெஞ்சல்,ஏக்கம் கலந்த குரல் பிரமாதம்..!
அத்துடன்
வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா..
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் இங்கு கலைந்ததுண்டா..
சொல்கின்ற மொழிகளில் தீர்ந்து விடும்.. சொல்லாத காதல் தீர்வதுண்டா..
ஆகிய வரிகளும்,
உள்ளங்கள் பேசும் மொழியறிந்தால் உன் ஜீவன் துடிக்க தேவையில்லை.. என்ற வரியும் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்..
நன்றி.
மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்...,
1998ல் வெளியாகி ஹிட் ஆன நிலாவே வா திரைப்படத்தில் இடம் பெற்ற நிலவே நிலவே.. என்ற பாடலாகும்.
வேகமான பாடலாக ஆரம்பிக்கும் இப்பாடல் இடையில் மெதுவாக செல்வதும் பின் வேகமடைவதும் சூப்பர்.
காதலியின் பதிலை வேண்டி நிற்கும் இப்பாடலில் விஜயின் கெஞ்சல்,ஏக்கம் கலந்த குரல் பிரமாதம்..!
அத்துடன்
வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா..
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் இங்கு கலைந்ததுண்டா..
சொல்கின்ற மொழிகளில் தீர்ந்து விடும்.. சொல்லாத காதல் தீர்வதுண்டா..
ஆகிய வரிகளும்,
உள்ளங்கள் பேசும் மொழியறிந்தால் உன் ஜீவன் துடிக்க தேவையில்லை.. என்ற வரியும் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்..
மீண்டும் நம்ம மின்சார கண்ணன், மாண்பு மிகு மாணவன், பெண்களின் ப்ரியமானவன், எங்களை குஷிப்படுத்தும் யூத்தான அழகிய தமிழ் மகன், இதயங்களின் வேட்டைக்காரன், தமிழக மக்களின் எதிர்கால காவலன் எங்களின் நண்பன்(ப்ரண்ட்ஸ்), திரையுலகின் சுக்கிரன் என்றும் வெற்றிகளையே நாளைய தீர்ப்பாக எழுதும் தமிழன் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..
விழித்திரு..தனித்திரு.. பசித்திரு… ஜெயித்திடு..
மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்...,
தளபதிக்கு எனது வாழ்த்துக்கள்...
சூப்பர்..
எனக்கு பிடிச்ச பாடல் நிலாவே வா படத்தில் நிலவே நிலவே
வாழ்த்துக்கள்......
சிறந்த பதிவு..
அட நீங்களும் நம்மாளு..
தலைவருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?
ஒரு சிறிய தவறு நண்பா
விஜய் சிறிய வயதில் நடனம் கற்றுக்கொள்ளவில்லை.. சினிமாத்துறைக்கு வந்தபின்பே நடனம் கற்றுக்கொண்டார்
தமிழ்மணம் வேலை செய்யவில்லை பாஸ்......... அப்புறமா வந்து ஓட்டு போடுறன்
//டீன் ஏஜ் கவர்மேண்டின் chief minister
ராகுல் காந்திக்கு டீன் ஏஜ்னா என்னன்னு தெரியல போல , வயசாயிடுச்சின்னு கழட்டி விட்டுட்டாப்புல .. ஆமா டீன் ஏஜ்னா ஒரு நாப்பது அம்பது வயசு வரைக்கும் சொல்லலாமா?
// நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை
யாரை இழுத்தார் ... சங்கவியவா? இப்ப சோனான்னு புது பீஷு மாட்டி இருக்காம் , அவர இழுக்க சொல்லுங்க , உடம்பாவது குறையும்
//விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
contradiction ஆ இருக்கே , அவரு பாடுனா எப்படி கேக்குறவங்களை கவரும்
// 1974 ஜுன் மாதம் 22ம் திகதி சென்னையில் திரு.S.A.சந்திரசேகர், திருமதி ஷோபா சந்திரசேகர் ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் விஜய்.
தமிழ் நாட்டுக்கு ஏழரை அப்பதான் ஆரம்பம் ஆச்சு ....
// 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
என்னங்க அவ்வளவு வருசமாவா அந்த படத்த எடுத்துக்கிட்டு இருக்காங்க .. அவதார விட பெரிய ப்ராஜக்ட்ஆ இருக்கும் போல...
// நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய்.
அவரு எந்த காலேஜ்ல படிச்சி ஜட்ஜ் ஆனாறு ...
//காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.
ஓ இதுல எல்லாம் இவரு பண்ணுனதுக்கு பேருதான் நடிப்பா? இந்த படங்களை எல்லாம் ஆஸ்கார் கமிட்டிக்கு அனுப்பி வையுங்க , தப்பு பண்ணிடோம்னு அந்த வருசத்துல சிறந்த நடிகருக்கு கொடுத்த விருதை எல்லாம் புடுங்கி உங்க விஜய் கிட்ட கொடுத்து கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பாங்க ....
// 1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது.
எப்படி மறக்க முடியும் சிம்ரன் கூட நடிச்ச முதல் படமாச்சே ...
//கில்லி, திருமலை,திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என எதிரிகளை தன்னை வருத்தும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகளில் புரட்டி எடுத்தார்..
அவரை மட்டுமா வருத்தாறு பாக்குற எல்லாரையும் சேத்துல வருத்தாறு ....
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விஜயை எனக்கு முதல் ஏனோ புடிக்காது காரணம் இன்றி,
இப்பொது திமுகாவை ( திமிகா அனுதாபி)விட்டு வந்து கடந்த தேர்தலில் திமுகாவை சாடியதில் இருந்து
விஜய் அதிகம் புடிக்குது எனக்கு பாஸ்,
வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
விஜயின் படங்களில் லவ் டுடே எனக்கு புடித்த படம்
( நினைத்தேன் வந்தாய் படமும் புடிக்கும் அதில் நம்ம தேவயானியுடன் ஜோடி போட்ட முதல் படம் ஆச்சே)
ஹிஹிஹி என்ன ஒரு விரிவான பதிவு..நான் இவ்வாறு தான் போடா இருந்தேன்..நேரமின்மையால் விட்டுவிட்டேன்...வாழ்த்துக்கள்!!
ஹிஹிஹி என்ன ஒரு விரிவான பதிவு..நான் இவ்வாறு தான் போடா இருந்தேன்..நேரமின்மையால் விட்டுவிட்டேன்...வாழ்த்துக்கள்!!