எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, June 17, 2011

ஒரே ஒரு காதலை பேசும் 08 திரைப்படங்கள்

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

மொகலாய அரச வம்சம் வீரத்துக்கு மட்டுமன்றி காதலுக்கும் பெயர் பெற்றது. ஷாஜகான்-மும்தாஜ் (இன்றைய தினமே மும்தாஜின் நினைவு தினம்) அக்பர்-ஜோதா என நீண்டு செல்லும் அரச காதல் காவியங்களில் பிரபலமானது சலீம் அனார்கலி காதல் கதையாகும். அக்பர் ஜோதா தம்பதியனரின் மூன்றாவது மகனான சலீம் (முன்னைய இரு பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்) தன் எட்டு வயது முதல் போர்களத்தில் நின்று போராடி 14 ஆண்டுகளின் பின் நாடு திரும்புகின்றான். நாடு திரும்பியவன் சிலையாக நின்ற உயிருள்ள அனார்கலியை (இது அக்பரினால் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயராகும்) காதலிக்க ஆரம்பிக்க இருவருக்குள்ளும் காதல் வளர்ந்து பெரு விருட்சமாகின்றது. இக்காதலை தந்தை அக்பர் எதிர்க்க மகன் சலீம் அவருக்கெதிராக அனார்கலியை மீட்க போர் புரிகின்றான். போர் முடிவில் சலீம் மரணதண்டனை கைதியாகின்றான். தண்டனை நிறைவேறும் சமயத்தில் அனார்கலி தானே முன் வந்து சரணடைய சலீம் விடுதலையாகின்றான். அனார்கலிக்கு மரணம் நிச்சயிக்கப்படுகின்றது. கடைசி ஆசையாக மொகலாயத்தின் ஒரு இரவு ராணியாகின்றாள் அனார்கலி. மறுநாள் உயிருடன் கல்லறையாக்கப்படுகின்றாள்.

இந்த உருக்கமான காதல் கதை வெறும் கட்டுக்கதை என்றும் கூறப்படுகின்றது. அக்பர் வரலாற்றிலோ சலீம் வரலாற்றிலோ அனார்கலி பற்றிய குறிப்புகள் இல்லை என்றும் இது சுவாரஸ்யத்துக்காக உருவான கதை என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சலீம் பல மனைவியரை கொண்டிருந்தான் என்றும் அவனுக்கு முதல் திருமணம் 1585 பெப்ரவரி 13ம் திகதி மன்பாவதி பாயுடன் நடந்ததாகவும் பின் மொகலாயர்கள் பல தாரங்களை கொண்டிருக்கலாம் என்ற விதிப்படி ஜகத் கோசின் மற்றும் இளவரசி மன்மதி ஆகியோருடன் நுார்ஜஹான் (உலகின் ஒலி) என்ற மெஹர்-உல்-நிசா (இன்றும் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தவர்) என்பவரையும் திருமணம் செய்து கொண்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

எது எப்படியிருப்பினும் சுவாரஸ்யமான - உருக்கமான இக் காதல் கதையை மையப்படுத்தி இந்திய துணைக்கண்ட சினிமா 08 திரைப்படங்களை கண்டுள்ளது. இந்திய சினிமாவில் 07 திரைப்படங்களும் பாக்கிஸ்தான் சினிமாவில் 01 திரைப்படமும் வெளியாகி உள்ளன. 

இந்திய சினிமா ஒலி இன்றி இருந்த காலத்திலேயே முதல் திரைப்படம் வெளியானது.

1928ல் Loves of a Moghul Prince என்ற பெயரில் Charu Roy, Seetha Devi, Sawan Singh நடிப்பில் இக்கதை சத்தமில்லா திரைப்படமாக வெளியானது. திரைப்படத்தை Charu Roy, Prafulla Roy ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர்.

 

பின் பிரதீப் குமார், நுார்ஜஹான் ஆகியோர் சலீம் அனார்கலியாக நடிக்க 1953ல் நந்திலால் ஜஸ்வந்லால் இயக்கத்தில் அனார்கலி  अनारकली என்ற பெயரில் வெளியானது முதல் பேசும் மொகலாய படம். இத்திரைப்படம் இந்தி மொழி திரைப்படமாக அமைந்தது. 175 நிமிடங்கள் கொண்ட இந்த பேசும் திரைப்படம் Mono ஒலிநயத்துடன் கறுப்பு வெள்ளை திரைப்படமாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் C.ராமச்சந்திராவின் இசையில் லதா மங்கேஸ்கர் அவர்கள் பாடியிருந்தார்கள். இதில் Yeh Zindagi Usiki Haiஎன்ற பாடல் பெயர் பெற்றதாகும்.


02 ஆண்டுகள் கழித்து தெலுங்கு திரையுலகம் இக்கதையை திரைப்படமாக்கியது. Vedantam Raghavaiah அவர்களின் இயக்கத்தில் A.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி நடிப்பில் அவரின் தயாரிப்புடன் அனார்கலி என்ற பெயரிலேயே வெளியானது. பாடல்களை Samudrala Raghavacharya எழுத ஆதிநாராயண ராவ் இசையமைக்க கண்டசாலா, K.ஜிக்கி, P.சுசீலா, P.லீலா ஆகியோர் பாடினர்.


பின் 1958ல் பாக்கிஸ்தானுக்கு கதை சென்றது. அங்கு Anwar Kamal Pasha இயக்கத்தில் உமர் அஜ்நல்வியின் திரைக்கதை அமைப்புடன் முகமட் அவ்ஷால், சுதி, நுார்ஜஹான் நடிப்பில் அனார்கலி  اناركلی ) என்ற பெயரில் ஜுன் 06ம் திகதி வெளியாகி பெரு வெற்றி பெற்றது.




மீண்டும் இந்திய சினிமாவே இக்கதையை திரும்பிப்பார்க்க ஆரம்பித்தது 1960ல். Mughal-e-Azam (मुग़ल- आज़म,) என்ற பெயரில் K.Asif அவர்களின் 18 வருட கடின உழைப்பினை தொடர்ந்து 09 வருடங்கள் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வெளியாகியது இத்திரைப்படம். பிருத்விராஜ் கபுர்(அக்பர்), திலீப் குமார்(சலீம்), அழகு பதுமையாக கண்களில் காதலை கொண்டு வந்த மதுபாலா(அனார்கலி) ஆகியோர் நடித்த இத்திரைப்படம் $11,500,000 பணத்தை வசூலித்தது. இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றித்திரைப்படங்களில் இந்த கறுப்பு வெள்ளைத்திரைப்படமும் ஒன்றாகும்.

அனார்கலி கொல்லப்படுவதாக இருந்த கதையில் அவரின் தாயாருக்கு அக்பர் வழங்கியிருந்த வாக்குறுதிக்கேற்ப ரகசிய சுரங்கம் ஊடாக நாட்டை விட்டு தாயாருடன் அனார்கலி அனுப்பி வைக்கப்படுவதாக இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்திய ராணுவத்தினரின் உதவியுடன் இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நௌசாத் அவர்களின் மனதை வருடும் இந்துஸ்தானி இசையில் அமைந்த பாடல்களை முகமட் ராஃவி, லதா மங்கேஸ்கர், ஷாம்ஷாட் பேகம் ஆகியோர் பாடினர். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.


இத்திரைப்படத்தின் வசனங்கள் இன்றும் பலராலும் பேசப்படுகின்றன. Amanullah Khan, Kamal Amrohi, Wajahat Mirza, Ehsan Rizvi ஆகியோர் இணைந்து எழுதிய வசனங்களுக்காக 1961ல் சிறந்த வசனங்களுக்கான  Film fare விருதும் வழங்கப்பட்டது.

ஆவணி 05ம் திகதி 1960ல் உலகெங்கும் 150 தியேட்டர்களில் வெளியாகிய இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர்(R.D.மித்துர்) ஆகியவற்றுக்கான Film fare விருதுகளையும் 1961ல் தட்டிச்சென்றது.


தந்தை பெரியார் அவர்கள் பார்த்த நான்கு திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும்.(ஏனையவை ஔவையார்,சந்ரலேகா,சூரியகாந்தி) அத்துடன் எகிப்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஓடிய ஒரே ஒரு இந்திய திரைப்படமும் இதுதான்.

 

பின்பு ஜெமினி பட அதிபர் S.S.வாசன் அவர்களினால் தமிழில் மொழிமாற்றம் பெற்று அக்பர் என்ற பெயரில் 1961ல் வெளியானது.

கம்பதாசன் பாடல்களுக்கு வரி எழுத நௌஷாத்தின் அதே மெட்டுகளுக்கு உருவான பாடல்களை P.சுசீலா,ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர் பாடினார்கள்.



இப்பாடலின் ஹிந்தி வடிவத்தை கேட்க,பார்க்க இங்கே செல்லவும்..
இத்திரைப்படம் பற்றி மேலும் கூற வேண்டும்..கால ஒழுங்கில் வருகின்றேன்.

 

தமிழைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அனார்கலி மிளிர்ந்தாள். 1966ல் Kunchacko அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில் பிரேம் நஸீர், K.R.விஜயா நடிப்பில் பாபுராஜின் இசையுடன் அனார்கலி അനാർക്കലി திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படத்தின் வசனங்களை Vaikom Chandrasekharan Nair எழுத பாடல்களை வயலார் (Vayalar) எழுதினார். பாடல்களை P.சுசீலா, K.J.ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, L.R.ஈஸ்வரி ஆகியோர் பாடினார்கள்.

 

நீண்ட நாட்களின் பின்னர் 2004ல் இவர்களின் கதை திரைக்கு மீண்டும் வந்தது. ஆனால் வித்தியாசமாக..

J.S Films நிறுவனத்தார் 185 நிமிட திரைப்படமாக மாற்றி Mughal-e-Azam  திரைப்படத்தை தந்தார்கள். இதில் விசேடம் என்னவென்றால் அப்போது கறுப்பு வெள்ளை திரைப்படமாக இருந்தது இப்போது வண்ண திரைப்படமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமாக மிகவும் உன்னிப்பாக செதுக்கியுள்ளனர் கணனிவல்லுனர்கள்..அவர்களுக்கு ஒரு சல்யுட்.

 

மறு ஆண்டே அத்திரைப்படதை தமிழிலும் மொழிபெயர்த்து தந்தனர். வசனங்களால் பேசப்பட்ட இத்திரைப்படத்தினை நேற்று மீண்டும் பார்த்தேன் மொழிமாற்றத்தின் பின் வசனங்களை விளங்கி கொள்ள முடிந்தது எனலாம். கவிதை நடையில் வரும் வசனங்கள் நச்..

சலீம் போர்க்கள பாசறையில் நின்று கவிதை எழுதிக்கொண்டிருப்பான்..அப்போது நண்பன் துர்ஜன் சிங் கேட்பான்.

வாள்களின் சத்தத்தின் நடுவில் கற்பனை சிதறாமல் எப்படி??

சலீம்:- போர்க்களத்திலும் கவிஞன் வாள் கவிதை பேசும்.. வேப்பமரங்களுக்கு மத்தியில் மாமரம் நாட்டால் சுவை மாறுமா?

துர்ஜன்:- இல்லை.

சலீம்:- அது போலத்தான் போர்க்களத்திலும் கவிஞன் கற்பனை வற்றாது.

 

மற்றொரு சந்தர்பத்தில் அனார்கலி ஒரு இரவுக்கான ராணியாக முடி சூடி கொண்டதும் அக்பரை பார்த்து “இப்போது முடி சூடிக்கொண்ட இந்துஸ்தான் ராணி அனார்கலி தங்களின் நாளைய கொலைக் குற்றத்தை இன்றே மன்னித்தருள்கின்றாள்..” என்பாள்.. இப்படி ஒரு வார்த்தை சவுக்கடியை எந்த மன்னனும் வாங்கியிருப்பானா??

 

இத்திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த வசனம்.. ஒரு கவிதை போட்டியின் முடிவில்(காதலின் ஆரம்பத்தில்) சலீம் பரிசளிக்கையில் அனார்கலிக்கு முள்ளும் எதிரான போட்டியாளருக்கு பூவும் வழங்குவான். அனார்கலி கூறுவாள் “நான் மிகவும் அதிஸ்டசாலி..முள் வாடாது... பூ வாடி விடும்..இது போதும் இளவரசே”

 

இத்திரைப்படத்தின் இனிமையான பாடல்கள் ஏற்கனவே அக்பர் திரைப்படத்தில் தமிழில் வந்திருந்தாலும் சில மாறுதல் வரிகளுடன்(நேரடி மொழி பெயர்ப்பு) மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் இனிய குரலில் கேட்க கிடைத்தது.. அனைத்தும் சூப்பர்.

அதிலும் உந்தன் சபையில் எந்தன் விதியை..என்று அப்போது P.சுசீலா, ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர் பாடிய இரட்டைக் குரல் பாடலை ஸ்வர்ணலதா தனித்து குரல் மாற்றிப்பாடிய விதம் அருமையான ரசனையை தந்தது..அந்த ரசனையை நீங்களும் அனுபவியுங்கள்..

இங்கு எந்தன் விதியை உந்தன் சபையில் சோதித்தே நானும் பார்ப்பேனே… என மாறுகின்றது பாடல்..

 முதலில் பழைய பாடல்..



புதிய வடிவில் வந்த பாடல்..

 

சலீம் அனார்கலி கதையை பேசிநின்ற இத்திரைப்படங்கள் மத்தியில் சலீமின் தந்தை,தாயான அக்பர் ஜோதா காதல் கதையை ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் 2008ல் A.R.ரகுமானின் இசையுடன் தந்தார் அஸ்தோஸ் கௌசிகர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படமும் ஸாஜகான் மும்தாஜ் காதலை கூறும் அக்பர் ஹானின் தாஜ்மஹால் திரைப்படமும் மொகலாய காதலை பேசி நிற்கின்றது என்பது வித்தியாசமானதும் ரசிக்கத்தக்கதுமாகும்.


நன்றி.., மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்,


11 Responses so far

  1. Unknown says:

    தங்களுடைய காதலும் மொகாலய வம்சம் போன்றோ குருவே?
    //காதலுக்கும் பெயர் பெற்றது. ஷாஜகான்-மும்தாஜ் (இன்றைய தினமே மும்தாஜின் நினைவு தினம்)//
    மும்தாஜ் ஷாஜகானுக்கு நாலாவது மனைவி தெரியுமோ? அவவும் லேசு பட்டவா இல்லை அவவுக்கு இரண்டாவது புருஷன்

  2. Mathuran says:

    அனார்க்கலி கதையில் இவ்வளவு திரைப்படங்களா?

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்

  3. Mathuran says:

    அனார்க்கலி கதையில் இவ்வளவு திரைப்படங்களா?

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்

  4. Mathuran says:

    அனார்க்கலி கதையில் இவ்வளவு திரைப்படங்களா?

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்

  5. Mathuran says:

    அனார்க்கலி கதையில் இவ்வளவு திரைப்படங்களா?

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்

  6. ஜனகனின் எண்ண ஜனனங்கள்

    http://bloggersbiodata.blogspot.com/2011/06/blog-post.html

  7. அடடே.. என்ன ஒரு ரசனையான தொகுப்பு?

  8. @M.Shanmugan said...
    ஹ ஹ ஹா..
    தெரியும் தம்பி...அரச வம்சம் என்றாலே அப்படித்தானோ...??

    ....................................................................................

    @vaishu said...
    நன்றி அக்கா...

    ................................................................................
    ....

    @ மதுரன் said...
    ஒரு தடவை இல்லை..நான்கு நன்றிகள் உங்களுக்கு..ஹ ஹ.

    @பலே பிரபு said...
    மிக்க மகிழ்ச்சி..நன்றிகள் பல...

    .....................................................................................

    @சி.பி.செந்தில்குமார் said...
    நிச்சயமாக அண்ணா ரசித்து எழுதிய பதிவுதான் அண்ணா இது...
    நன்றி அண்ணா...

  9. Unknown says:

    தாங்களும் அரச வம்ஸமா?

  10. @மாலதி said...
    மிக்க நன்றி சகோதரி...

    .......................................................................................
    @M.Shanmugan said...
    பெயரை பார்த்ததும் தெரியலயா...??
    ராமனுக்கே பெண் கொடுத்த பரம்பரை...!!ஹஹஹ

Leave a Reply

Photobucket