எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, June 2, 2011

திரையுல பிரம்மாக்கள் ராஜா - ரத்தினம்

8 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இசையில் ஒர் யுகம் இசைஞானி இளையராஜா (ஞானதேசிகன்) இன்று தன் 68வது அகவையில் கால் பதிக்கின்றார்...

அவரோடு இணைந்து இயக்குனர் வித்தியாசமான படைப்பாளி மணிரத்னம் இன்று தன் 55வது அகவையில் கால் பதிக்கின்றார்..

தேனியும் மதுரையும் தந்த திரையுல பிரம்மாக்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
.



இவர்களுக்காக ஒரு பதிவு.. பாடல்கள் ஊடாக வாழ்த்துகள்..


மணிரத்தினம் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்தது கர்நாடகாவில் 1983ல்.
அனில் கபூர்,லக்ஷ்மி நடித்த பல்லவி அனு பல்லவி (ಪಲ್ಲವಿ ಅನುಪಲ್ಲವಿ) திரைப்படம் இளையராஜாவுடன் இவரை இணைத்து வைத்தது முதன் முதலாக..




அதை தொடர்ந்து மலையாளம் இவர்களின் படைப்பை ரசித்தது. மோகன் லால், சபிதா நடித்த உனரு திரைப்படம் 1984ல் வெளிவந்தது.




மணிரத்தினம் தமிழில் அறிமுகமானார் 


1985 ஜூன் மாதம் 5ம் திகதி வெளியான பகல் நிலவு திரைப்படம் மணிரத்தினத்தை தமிழிற்கு அழைத்து வந்தது.


இளைய ராஜாவின் குரலுடன் s.ஜானகியின் குரலும் இணைந்த பூமாலையே தோள் சேர வா..பாடல் இன்றும் காதலர் கீதமாக நிலைத்துள்ளது..






* இவர்கள் இருவரும் 1985ல் இதய கோவில் திரைப்படத்தில் மீண்டும் இணைந்தனர். பெரு வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் 8 பாடல்கள் உள்ளன. அனைத்தும் சூப்பர் ஹிட்..!


அதில் ஒரு பாடல் “இதயம் ஒரு கோவில்..”
S.P.B ன் குரலில் மோகன்,அம்பிகா திரையில் இணைந்து கொண்ட பாடல்..





* இவர்கள் இணைந்த இரண்டாவது திரைப்படம் 1986ல் வெளியான மெளனராகம்.
இது தேசியவிருதை 1987ல் வென்று கொடுத்தது..


மோகன்,ரேவதி நடித்த திரைப்படம் வித்தியாசமான திருமண உறவுகளை சித்தரித்தது..
இதில் நிலாவே வா பாடல் பாடும் நிலாவின் குரலில் அழகாக ஒலிக்கின்றது.. பாடலிலும் திரைப்படத்திலும் பின்னப்பட்டிருக்கும் ஒளியமைப்பு அக்காலத்தில் பேசப்பட்ட ஒன்று.




அடுத்து இவர்கள் இணைந்த திரைப்படத்தில் மற்றொடு பிரம்மா கமல்ஹாசனும் இணைந்து கொண்டார். 1987ல் வெளிவந்தது மற்றொரு தேசிய விருது வென்ற நாயகன் திரைப்படம்.


கமல், சரண்யா தோன்றும் இப்பாடல் மனோ, சித்ராவின் குரலில் ராஜாவின் ஜாலங்களை கொண்டு வருகின்றது.
                                                             நீ ஒரு காதல் சங்கீதம்..


1988. பிரபு,கார்த்திக் இணைந்து நடித்த திரைப்படம் அக்னி நட்சத்திரம்.
வசூலில் $300,000 குவித்த இத்திரைப்படம் தமிழ் நாடு அரசு விருதையும் வென்றெடுத்தது.


இளைய ராஜா என்றதும் ஞாபகம் வரும் பாடல் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா..
இசைஞானியின் குரலில் மணிரத்தினத்தின் திரைப்படமாக்கலில் உருவாகிய பாடல் பட்டி தொட்டி எங்கும் முரசு கொட்டி நின்றது..




இடையில் தெலுங்கு திரையுலகம் சென்றார் மணி ராஜாவையும் அழைத்து கொண்டு..
கீதாஞ்சலி திரைப்படம் 1989ல் நாகார்ஜுனா, கிரிஜா நடிப்பில் வெளியானது.
இத்திரைப்படம் பின்பு இதயத்தை திருடாதே என்ற பெயரிலும் வெளியானது.


கீதாஞ்சலி..ஆமனி பாடயே..


                                காட்சியமைப்பில் இதயத்தை திருடிய பாடல் இது..
இதயத்தை திருடாதே..ஆத்தாடி அம்மாடி..


குழந்தைகளை மையப்படுத்தி அழகாக உருவாக்கப்பட்டு தேசிய விருது வென்ற திரைப்படம் அஞ்சலி.
இது இருவரையும் மீண்டும் தனித்தமிழ் திரைப்படமொன்றிற்காக 1990ல் இணைத்தது.


இளைய ராஜாவின் குழந்தைகள் கார்த்திக்,யுவன்,பவதாரணி இவர்களுடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பார்த்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர் இணைந்து பாடிய பாடல் வானம் நமக்கு வீதி..






தளபதி. மகாபாரதத்தின் செஞ்சோற்றுக்கடன் தீ்ர்த்த கர்ணனின் கதையை 157 நிமிட திரைப்படமாக்கினார் மணிரத்தினம். இந்தியாவின் இரு சூப்பர் ஸ்டார்கள் ரஜனி காந்த், மம்முட்டி கதாபாத்திரத்தின் கனத்தை தாங்க இளையராஜா இசையில் கனம் சேர்த்தார். புதிய இசைப்பாணியில் ராஜாவை வேறுபடுத்தி காட்டிய பாடல் S.P.B மற்றும் S.ஜானகி பாடிய வாலியின் வரிகளில் மனதை தொட்ட சுந்தரி கண்ணால் ஒரு சேதி..




தளபதியை தொடர்ந்து இருவரினதும் பாதைகள் மாறின.. இருந்தும் அது மீண்டும் பொன்னியின் செல்வனில் சந்திக்கும் எனக்கூறப்படுகின்றது.. பார்ப்போம்.


ராஜாவின் முதல் படைப்பு.. அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து T.M.S ன் குரலில்..


                                       மற்றுமொரு பாடல் P.சுசீலாவின் குரலில்..




*இருவரினதும் அண்மைக்கால பாடல்கள்..
                        * மணிரத்னம்.
ராவணன் திரைப்படத்தின் இசைப்புயல் A.R.ரகுமான் இசையில் கார்த்திக் உருகிய வைரமுத்துவின் வரிகளடங்கிய உசிரே போகுதே..


                                    
                       * இசைஞானி இளையராஜா.
அழகர் சாமியின் குதிரை திரைப்படத்தின் இசைஞானி இசையமைத்து பாடிய பாடல்..குதிக்கிற குதிக்கிற..




பாடல்களை கேட்டிர்களா?? பார்த்தீர்களா?? ரசித்தீர்களா?? இளையராஜாவின் மெட்டுகளும் மணிரத்தினத்தின் படைப்புகளும் காலம் கடந்தும் காவியம் பேசும்..


மீண்டும் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


குறிப்பு :- இளைய ராஜா பற்றிய பல பதிவுகள் மூத்த பதிவர் கான பிரபாவின் 
ரேடியோஸ்பதியில்


நன்றி மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்,

8 Responses so far

  1. அருமையான தகவல் தொகுப்பு... ஜமாயச்சுட்டாய்டா அம்பி..

  2. Unknown says:

    கல்க்கிட்டீங்க அண்ணா பரம ரசிகர் போல

  3. நல்லதொரு தகவல் தொகுப்பு.. பயனுள்ள பதிவு.. நாளை நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தப் போகிறேன் :)

  4. @ Ashwin-WIN:- மிக்க நன்றி அண்ணா..வருகைக்கும் பாராட்டுக்கும்..

    @ M.Shanmugan:- நன்றி தம்பி..ஆமாம் வாழ்வியலில் நாம் அதிகம் ரசிப்பது அவர் இசையின் பாடல்களைத்தானே..

    @ கானா பிரபா:- மிக்க நன்றி அண்ணா.. தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன் தங்களை..

  5. @ LOSHAN :- அண்ணா மிகவும் நன்றி அண்ணா.. தங்கள் வருகை மேலும் உற்சாகம் தருகின்றது.

    @ சி.பி.செந்தில்குமார்:- ரொம்ப நன்றி அண்ணா..

Leave a Reply

Photobucket