எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, July 7, 2011

கைவிடப்பட்டுள்ள நிலையில் வரலாற்று சின்னங்கள்

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணத்தில் மன்னர் காலம் தொட்டு இன்று வரை அதிகளவில் பிரபல்யம் பெற்ற பிரதேசமாக காணப்படுவது நல்லுார் பிரதேசமாகும். மன்னர் காலத்தில் அவர்களின் இராசதானிகள், அரண்மனைகள் என அரசியல் ரீதியாகவும் ஆலயங்கள் என்பதனுாடக பண்பாட்டு ரீதியிலும் நல்லுார் பிரபல்யம் பெற்றிருந்தது. இதனால் வாழையடி வாழையாக வந்த சந்ததியினருக்கு யாழ்ப்பாணம் என்றதும் நல்லுார் சட்டென ஞாபகம் வரும் விதத்தில் மனதில் பதிந்திருந்தது, பதியப்பட்டிருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போதும் இது அசையாதிருந்தது. விடுமுறையை களிப்பதற்காக யாழ்ப்பாணம் வருபவர்களின் பிரதான தரிசனமாக நல்லுார் காணப்படுகிறது. உள்ளுர் மக்களாலும் வெளியுர் மக்களாலும், வெளிநாட்டு மக்களாலும் நிரம்பியிருந்த நல்லுார் 1980 களின் ஆரம்ப காலத்தில் இலங்கையில் உண்டான பதற்ற நிலையும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற 30 ஆண்டு யுத்தம் என்பன காரணமாக வெறிச்சோடி போகும் நிலை உண்டானது.

2002ல் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் போது வெளி பிரதேச மக்களின் வருகை யாழ்ப்பாணத்தை நோக்கி மீள ஆரம்பித்ததும் நல்லூர் பிரதேசம் மேலும் பிரபலம் பெற ஆரம்பித்தது. எனினும் இது 2007 வரையே தொடர்ந்தது.

2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதி சூழல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி திரும்பியது. தினசரி தென்னிலங்கை சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பலநுாற்றுக்கணக்கில் யாழ் வர தொடங்கினர். இதன் காரணமாக சோர்ந்திருந்த நல்லுார் மீண்டும் சுறுசுறுப்பாகியது. 

பொதுவாகவே நல்லுார் கந்தசுவாமி ஆலயம் இலங்கை பற்றி அறிந்தவர்களின் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆகையால் யாழ்ப்பாணம் நோக்கி வரும் இந்தியா உட்பட பல நாடுகளின் பயணிகள் நல்லுார் வந்து செல்ல தவறுவதில்லை. நல்லுார் முருகன் ஆலயம் பெரிய அழகிய கோபுரம், புதிதாக அமைக்கப்படும் கோபுரம், பரந்த ஆலய வளாகம் என மிக பிரமாண்டமான வடிவமைப்புடன் தோற்றமளிக்கின்றது.
மேலும் ஆலயத்தினை சூழ உள்ள திருமண மண்டபங்கள், மணிமண்டபங்கள், நினைவுகற்கள் முதலியவும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் அகப்படுகின்றன.


பொதுவாக சுற்றுலா பயணிகளின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பாக இருப்பது குறித்த ஓர் இடத்தில் அனேக விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அதனால் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நல்லூர் ஆலய சுற்றுப்புறத்தில்  விற்பனை நிலையங்கள் பல தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நல்லுார் சிறு வர்த்த நகராகி விட்டது

இவை பயணிகளை கவர்ந்திழுக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் மகிழ்விக்க கூடிய இடங்களும் நல்லுாரை சுற்றி காணப்படுகின்றன. ஆனால் அவை இன்று கவனிப்பாரற்ற நிலையில் சிதையும் தறுவாயில் உள்ளன. அதனால் அவை அனுபவிக்கும் நிலையில் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
தரைமட்டமாக்கப்பட்டுள்ள பூங்காவின் ஒரு பகுதி

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வீதியில் சுமார் 800m தொலைவில் பூங்கா ஒன்று காணப்பட்டது. அன்று இப்பூங்காவானது சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களுடன் அழகிய தோற்றத்துடன் ரம்மியமாக விளங்கியிருந்தது. ஆனால் இன்றோ இப்பூங்கா கைவிடப்பட்ட பிரதேசம் போல காட்சியளிக்கின்றது. சிறு வயதில் நான் விளையாடிய இந்த கிட்டுப்பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள் இன்று ஆட்டமின்றி காணப்படுகின்றன. அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை குகை, செயற்கை குன்று செயற்கை நீர்வீழ்ச்சி என்பனவும் இன்று அழியும் நிலையில் காணப்படுகின்றன.



பூங்காவில் உள்ள குகை ஒன்றின் சிதைவடைந்த பகுதி

தொடர்ந்து பருத்தித்துறை வீதியில் செல்கையில் உள்ள நுழைவாயில், மந்திரி மனை முதலியனவும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. இக்கட்டிடங்களின் சுவர்கள் வெடித்தும்,கட்டிடத்தின் சுவர்களை ஊடறுத்து மரங்கள் வளர்ந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. நீண்டகாலமாக இவற்றை பாதுகாக்கும் வேலைகள் எதுவும் இக்கட்டிடங்களுக்கு இடம்பெறவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.



தமிழா்களின் பண்டைய வரலாற்றை பேசிநிற்கும் தடங்களில் முக்கிய இடம் வகிக்கும் இவ்விடங்களுடன் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் சிலை ஒன்றும் இங்கு காணப்படுகின்றது. தமிழர்களின் ஓயாத வீரத்தினை பாராட்டி நிற்கும் இச்சிலையானது இன்று முறையான பராமரிப்பு இனை்மையால் உடைந்து விடும் சாத்தியத்தில் காணப்படுகின்றது.

இச்சிலையில் உள்ள சங்கிலிய மன்னனின் குதிரையினது முகமானது மிகவும் சிதைவடைந்துள்ளது. மன்னனின் பட்டத்து குதிரையின் மூக்கு உடைந்த நிலையில் அந்த சிலையை நான் கண்ட போது பல்வேறு நடைமுறை சம்பவங்கள் மனதில் வந்து போயின. இவ்வாறான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் பல யாழில் சிதைவடைந்த நிலையில் இருப்பது மனவேதனையை தரும் விடயங்களாகவே அமைகின்றது.

இவ்வாறன வருந்த தக்க விடயத்தின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இங்கு,

சுற்றுலா பயணிகளினால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் மிக அதிகமாகும். அதிலும் காலநிலை ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணத்தின் காலநிலையானது வருடமொன்றிற்கு எட்டு மாதங்கள் வரை சுமுகமாகவே இருக்கும். இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை யாழ் நோக்கியதாக அமைகின்றது. ஆனால் இங்கிருக்கின்ற வளங்கள் உரியவர்களினால் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் வேண்டா வெறுப்பாக கைவிடப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் யாழ்ப்பாணம் வரும் இவர்கள் திரும்பிச்செல்லும் போது ஏமாற்றத்துடனேயே செல்கின்றனர்.

ஆகவே யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பகுதியாக விளங்கும் நல்லுார் பகுதியை குறித்த தரப்பினர் துரித முயற்சி எடுத்து அழகு படுத்துவதன் ஊடாக இனி வரவிருக்கும் சுற்றுலா பயணிகளையும் கவரகூடியதாக இருக்கும். அத்துடன் யாழ்ப்பாணத்தின் வரலாறு பேசும் சின்னங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப்படுவதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு யாழ் மண்ணின் தொன்மை புலப்படுத்தபடும். ஆகையால் இதற்கான நடவடிக்கைகளை குறித்த தரப்பினர் மேற்கொள்வது காலத்தின் காட்டாயமாகும்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,

5 Responses so far

  1. நல்ல பதிவு சகோதரா.....

  2. THUVARAA says:

    Arumaiyana pathivu nanpa

  3. யாழ்ப்பாணத்தில் நிற்குமட்டும் எனக்கு இவற்றின் அருமை தெரியவில்லை. உன்களுக்கு இப்பவே இவ்வக்கறை இருப்பது பாராட்டத்தக்கது.

Leave a Reply

Photobucket