யாழ் பல்கலை கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், ஊடகக் கல்வியானது கல்விச் செயற்பாடுகளில் முதன்மையானதாகும். இதனை ஒரு கலையாக தனித்துவம் வாய்ந்தவர்கள்; வளர்த்தனர். இன்றைய நிகழ்வின் வெளியீடான பத்திரிகையின் பெயர் கடிவாளம் எனும் போது நான் சற்று சிந்தித்தேன். பொதுவாக எந்த செயற்பாட்டுக்கும் ஒர் கட்டுக்கோப்பான ஓர் வரையறையால் வழிப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பத்திரிகைக்கு கடிவாளம் எனும் அர்த்தமான பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.
ஏனைய பல்கலை கழகங்களுடன் ஒப்பிடும் போது யாழ் பல்கலை கழகத்திலேயே முதன் முறையாக ஊடக கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. எனவே யாழ் பல்கலை கழக ஊடக மாணவர்கள் மற்றைய பல்கலை கழகங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் தனித்துவம் உள்ளவர்களாகவும் வருவார்கள். ஆகவே இதனுடன் தொடர்புடைய அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட்டு சமுகத்தை கட்டியெளுப்பும் மாறாத பொறுப்பு எங்களிடம் இருத்தல் வேண்டும். யாழ் பல்கலை கழகத்தின் மகுட வாசகமான ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்பதற்கமைவாக உள்ளதை உள்ளவாறு சொல்வது ஊடகம் என்பதற்கு அமைவாகவும் மாணவர்கள் செயற்பட வேண்டும். எனவே இந்த குறுகிய கால கற்கை நெறியை தொடர்ந்து முதல் முயற்சியாக கடிவாளம் பத்திரிகையினை வெளியிடும் முயற்சியை பாராட்டுவதோடு மாணவர்களின் பணி இன்னமும் சிறக்க யாழ் பல்கலை கழகத்தின் சார்பாக எங்களது உதவி உங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்புரையாற்றினார். பத்திரிகைகளின் மதிப்பீட்டு உரைகளை குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்களும்,எழுத்தாளர்களும்,பேராசிரியர்களும் மேற்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குடாநாட்டு ஊடகவியலாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்த வெற்றி FM-TV நிறுவனத்திற்கும், தீபம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் தொலைபேசி ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வாழ்த்திய சக்தி Fm நிறுவனம், சூரியன் Fm நிறுவனம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும் ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஸ் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
கடிவாளம் குழுமத்துக்கு என் வாழ்த்துக்கள்
இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....