எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, December 24, 2011

நண்பன் - All Is Well...!

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..!

இன்று இளைய தளபதி விஜய்யின் நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன.  பாடல்கள் வெளியாகிய நேரத்தில் இருந்து இப்போது வரை மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளன ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அமைந்த பாடல்கள் எனலாம்.

இத்திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன வழமையான விஜய் படங்களை போன்றே. ஆனால் சற்று வித்தியாசமான பாடல்களாக இவை இருப்பது மேலும் ரசிக்க வைக்கின்றது.

இப்பதிவில் நான் அந்த ஆறு பாடல்களினதும் வரிகளை முழுமையாக தரலாம் என வந்துள்ளேன்..
அட சந்தோசத்தை பாருங்கோ.....!!


முதலில் All Is Well...

heartile battery..charge தான் all is well

தோல்வியா tension-ah..சொல்லிடு

all is well..

tight ஆகா lifey ஆனாலும்

லூசாக நீ மாறு

பப்பாளி போலே நீ வாழ்ந்தால்

பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

காட்டு வழியிலே நூலை கண்டால்

all is well

நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்

மாச கடைசியில் kings um தீர்ந்தால்

all is well

துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம் ( heartile battery..charge தான் all is well..)

சரணம் – 1
ஏலே வெல்ல சொக்கா

கையில் என்ன book அஹ ?

zoo கெட்ட cook ah?
scene போடாதே
ஹேலே மக்கா மக்கா
மக்கா நிக்கும் மாக்க
ஒத்த காலு கொக்கா
நீ mark-u கொத்தி நோகாதே


சோடா கோலியா

நீ load மேல load ஏத்த மூளை காலிய

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u

topper என்பதால் hero இல்லை

all is well

topic மாறினால் அவனும் zero
topper-um
joker என்பதால் zero இல்லை
all is well
சீட்டு கட்டிலே நீ தான் hero ( heartile battery..charge தான் all is well..)

சரணம் – 2
நீயும் கூட பிரம்மா

table desk-ah தம்மா ..மாத்தி குத்து கும்மா

tune போடம்மா
students என்ன யம்மா
cell குள்ள sim-ah?..பூட்டி வைக்கலாமா ?
நாம் escape ஆகி போவோமே
bathroom தாபால் இல்லை என்றால்
பாடு பாடேண்டா
ஒரு tms-ah ஜேசுதாஸா ஆவோம் வாயேண்டா
முளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u

bathroom-u குள் பாம்பு வந்தால்

all is well

தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
all is well

beer-u அடிச்சு தான் தொப்பை போட்டால்

all is well

நீயும் ஆகலாம் police ஏட்டு.. ( heartile battery..charge தான் all is well..)

வரிகள் :- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஸ்
.....................................................................................................................
.....................................................................................................................
2. இருக்காண்ணா..
இருக்காண்ணா

இடுப்பிருக்காண்ணா

இல்லையானா இலியானா

உன் இடைத்தானாஇன்பக்

கடை தானா மெல் இடைதாண்டி

குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு..!

நான் துத்த நாகத் தகடு..!

உன் ஓதட்டுக்குள் எத்தன ஒதடு..!
ஒன்னு குடு குடு..!

அடி அஞ்சன மஞ்சன மயிலு..!

நீ கஞ்சன் ஜங்கா ரயிலு..!

உன் இடுப்பே ஆறாம் விரலு..!
நீ கிளு கிளு..!

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி

மல்லி வாச மல்லி

உன் மேனி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி

கிள்ளி கன்னம் கிள்ளி

விளையாட வந்தவன் கில்லி

சரணம் – 1
ஒருவாட்டி இடுப்பாட்டி

மலை இறக்க இறக்கத்துல தள்ளேன்

இடங்காட்டி தடம்காட்டி
என்னை அறக்க பறக்க வந்து
கொல்லேன்

அடங்காட்டி மடங்காட்டி

வாய் உறைக்க உறைக்க முத்தம் வைப்பேன்

படங்காட்டி பயங்காட்டி
நெஞ்சு இறைக்க இறைக்க தப்பு செய்வேன்

நான் சின்ன பையன்

நீ கண்ண வையேன்

நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வாழ வாயேன்

சரணம் – 2
லயிச்சானா லயிச்சானாஇதழ்

லவங்கம் லவங்கம் கடிச்சானா

இனிச்சானா இனிச்சானா- வாய்
மடலில் கடல் தினிச்சானா..?

கொழுக்கானா மொழுக்கானநல்லா

பழுத்துப் பழுத்து தளுக்கானா

இழைச்சானா குழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி உழைச்சானா

நீ ஜெங்கிஸ்கானா

நீ உன் கிஸ் தானா

நான் மங்குஸ் தானா

உன் கையில் கஜகஸ்தானா..??

வரிகள் :- பா.விஜய்
பாடியவர்கள் :- விஜய் பிரகாஸ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்

.....................................................................................................................
.....................................................................................................................
3. எந்தன் கண் முன்னே..
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

வரிகள் :- மதன் கார்க்கி
பாடியவர் :- ஆலாப் ராஜ்
.....................................................................................................................
.....................................................................................................................
4. என் ஃப்ரண்ட போல யாரு..
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்

நீ எங்க போனாய் எங்க மச்சான்
என்னை எண்ணி எண்ணி ஏங்க வைச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தைச்சான்
நம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்

சரணம் 
தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் துாரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போல நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

வரிகள் :- விவேகா
பாடியவர்கள் :- க்ரிஸ், சுசித் சுரேசன்
.....................................................................................................................
.....................................................................................................................
5. நல்ல நண்பன்..
நல்ல நண்பன் வேண்டும் என்று

அந்த மரணமும் நினைகின்றதா..?

சிறந்தவன் நீ தான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா..?

இறைவனே இறைவனே

இவன் உயிர் வேண்டுமா..?

எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்காது போதுமா..?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் திண்பதா..?
இவன் சிரித்து பேசும் மொழி
அதை வேண்டினோம் மீண்டும் தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்

எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா..?

மரணம் எனும் மேவனத்தில்
எங்கள் ஞாபகங்கள் போகவில்லையா..?

இறைவனே இறைவனே

உனக்கில்லை இரக்கமா..?

தாய் இவள் அழு குரல்
கேட்ட பின்பும் உறக்கமா..?

வா நண்பா வா நண்பா தோள்களில் சாயலாம்
வாழ்ந்திடும் நாளெலாம் நான் உன்னை தாங்கவா..?

வரிகள் :- நா.முத்துக்குமார்
பாடியவர் :- ராமகிருஸ்ணன் மூர்த்தி

.....................................................................................................................
.....................................................................................................................
6. அஸ்க் லஸ்கா...
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்த் அஸ்த் லைபே..

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..


அத்தனை மொழியிலும் வார்த்தை

ஒவ்வொன்றும் கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்



உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே

ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே


ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்

விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ..


பிளாடோவின் மகனாய் உன் வேடமா?

ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?

பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..


தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்

ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்

கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?


கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்

வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா

இஷ்க் இஷ்க் மைலே..

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ

ஒரு காதல் உந்தன் மேலே..

வரிகள் :- மதன் கார்க்கி
பாடியவர்கள் :- விஜய் பிரகாஸ், சின்மயி, சுவி
.....................................................................................................................
.....................................................................................................................
மதன் கார்க்கி எழுதிய அஸ்க் லஸ்கா.. பாடல் 16 மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளை கொண்டு உருவானது என்பது நீங்கள் அறிந்தது.. அவை எந்த எந்த மொழிகள்..?? என்ன அர்த்தம்..?? என்பது தொடர்பாக அடுத்து பார்ப்போம்..
  • Ask (அஸ்க்)- Turkish
  • Laska (லஸ்கா)- Šløvak
  • Amøur (ஆமோர்)- French/Španish
  • Ai (அய்)- Chinese
  • Ast (அஸ்த்)- Icelandic
  • Liebe (லேய்பெய்)- German
  • Ahava (ஆவா)- Hebrew
  • Bølingø (போலிங்கோ)- Lingala
  • Cinta (சிந்தா)- Malay
  • Ishq (இஸ்க்)- Arabic
  • Meile (மெய்லே)- Lithuanian
  • Løve - Ènglish
  • Ishtam (இஸ்டம்)- Telugu
  • Premam (பிரேமம்)- Malayalam
  • Pyaar (பியார்)- Hindi
  • Kaathal (காதல்)- Tamil
இவை அனைத்துக்கும் ஒரே அர்த்தம்தான்.. அது என்னவென்றால் காதல்....!!
தந்தையின் தேடலில் மகன் கார்க்கி... வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
வார்த்தை ஒவ்வொன்றும் 
மொத்தமாய் கோர்த்துத்தான்

காதல் செண்டொன்று செய்தேன்


சரி நண்பர்களே, நண்பன் பாடல்களை கேட்டு ரசியுங்கள்.., படம் பொங்கலுக்கு வெளியாகுகின்றது... அதனையும் ரசிப்போம்..

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,












Continue reading →
Monday, December 12, 2011

“ஸ்டைல் குரு” ரஜினிகாந். - வாழ்த்து பதிவு

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..

மிக மிக நீண்ட நாட்களின் பின் சந்திக்கின்றேன்..
நேற்று எம் தமிழ் பாவலன் பாரதியின் பிறந்த நாள்.. அவனுக்காக சிறப்பு பதிவு எழுத முடியாமை மனவருத்தம்.. இருப்பினும் இப்பதிவில் அவனுக்கும் ஒரு இடம் கொடுக்க உள்ளேன்..

இன்று தமிழ் திரையுலகம் என்றால் சட்டென ஞாபகம் வந்து சிறு பிள்ளை முதல் நரை முதியவர் வரை சொல்லும் ரஜினிகாந் அவர்களின் 62வது பிறந்த தினம்.
முதலில் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..



திரையுலகின் மன்னன்...
ஸ்டைலின் குரு, அதை பின்பற்றும் சிஷ்யன்கள் பலர்..
ஆறில் இருந்து அறுபது வரை வயது வேறுபாடின்றி உங்களை பற்றித்தான் பேச்சு..

அறுபது கடந்தும் இன்றும் நீங்கள் உழைப்பாளி..
ரசிகர் மனதின் தனிக்காட்டு ராஜா.. எம் அன்புக்கு நீங்கள் என்றும் அடிமை..
முத்துப்போன்ற வெள்ளை மனம் கொண்ட ராஜாதி ராஜாவே எம் இதய தளபதி..
அன்புள்ள ரஜனிகாந், நோயின் வலி கடந்து நிற்கும் நீங்கள் எந்திரன்..
முதுமை உங்களுக்கு அல்ல.. 
உங்களை சேர துடித்து களைத்து நிற்கும் அந்த முதுமைக்குதான் முதுமை...
ராணாவில் சந்திப்போம் இளமை ஊஞ்சலாடும் சிவாஜிராவ் அவர்களே...

இன்றைய பதிவு ரஜினியின் வாழ்த்து பதிவாக இருப்பதோடு மட்டுமன்றி நான் நீண்ட நாளாக பதிவிட வேண்டும் என நினைத்து சரியான நேரத்திற்காக காத்திருந்த “ரஜனியில் நான் அடிமையான 10 திரைப்படங்கள்” தொடர்பான பதிவாகவும் அமையவுள்ளது.

1. மூன்று முகம்.

அலக்ஸ் பாண்டியன், அருண், ஜோன் என்று மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் ரஜனி ஜொலித்த திரைப்படம் மூன்று முகம். இதில் அலக்ஸ் பாண்டியன் பாத்திரம் யாராலும் மறக்க முடியாதது. என்ன ஒரு கம்பீரம்,கர்ஜனை..
இருப்பினும் அலக்ஸ் பாண்டியன் பாத்திரம் குறுகிய நேர பாத்திரம் என்றாலும் அதை திறமையாக நடித்து மக்கள் மனதில் சிறு நிமிடங்களை கூட நிலைக்கும் வண்ணமும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதை உணர்த்திய ரஜனியின் முகம்.

தமிழக அரசு இத்திரைப்படத்திற்காக ரஜனிக்கு 1982ல் சிறந்த நடிகர் விருது வழங்கி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
எந்தப்பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்......


2. பில்லா

ரஜனியின் மற்றுமொரு பரிமாணம் வெளிப்பட்ட திரைப்படம் பில்லா..
திரைப்படத்தின் கதை உலகறிந்தது.. எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லை..
R.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் பில்லா,ராஜ் என்று இரட்டை வேடங்களில் கலக்கலான நடிப்பை 1980 ல் வெளிப்படுத்தி இருந்தார் ரஜனி.
இதில் ராஜ் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது..

3. ஆறிலிருந்து அறுபது வரை.

நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற திரைப்படம். என்னிடம் வந்து சேர்ந்த முதல் original Film CD கூட இத்திரைப்படத்தினுடையது என்றால் பாருங்களேன்.. வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளையும் செதுக்கி வைத்த திரைப்படம் S.P.முத்துராமன் அவர்கள் இயக்கிய ஆறிலிருந்து அறுபது வரை. இளைஞன்,அண்ணன்,காதலன்,கணவன்,எழுத்தாளன்,வாழ்ந்து முடித்த முதியவர் என அத்தனை பாத்திரத்திற்கும் ரஜனி பொருந்தி போனது 1979ல் தமிழ் திரையுலகில் பதியப்பட்ட வரலாற்றுத்தடம் எனலாம்.

இன்றும் மாலை வேளையில் மீண்டும் நான் பார்க்க போகின்ற திரைப்படமும் இதுவே..
காலங்கள் கடந்து நிற்கும் காதலர்களின் தேசிய கீதங்களில் ஒன்று..

4. நான் அடிமை இல்லை

பொதுவாக திரைப்படங்கள் மனதை எந்த அளவிற்கு பாதித்திருந்தாலும் கண்ணீர் சொரியும் அளவிற்கு தாக்கத்தை தருவதில்லை.. திரைப்படம் என்ற பார்வை எமக்கு இருப்பது அதற்கு காரணமாக அமைகின்றது.

ஆனால் இதுவரையில் திரைப்படம் பார்த்து நான் அழுதது என்றால் அது நான் அடிமை இல்லை திரைப்படம்தான். அதிலும் சிறுவன் பாடும் பாடல் ஒலிக்கும் போது இன்றும் கண்ணீர் ததும்பும்.
ஒரு புகைப்பட கலைஞன் யாருக்கும் கட்டுப்படாமல் சுய கௌரவத்துடன் சொந்த காலில் நின்று வாழும் கதையே திரைப்படத்தின் மையகதை.
நான் நானாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் விதைத்த திரைப்படமும், விஜய் என்ற கதாபாத்திரமும் காலமுள்ள வரை என் நினைவில் இருந்து நீங்காது..
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது....

5. முத்து

ரஜனியை நட்சத்திர அந்தஸ்துடன் வெளிப்படுத்திய திரைப்படங்களி்ல் முத்து திரைப்படமும் ஒன்று. ஸ்டைல் காரணமாக அதிகம் ரசித்த படம். அத்துடன் ரகுமான், வைரமுத்து, S.P.பாலசுப்பிரமணியம் இவர்களின் கூட்டணிக்காகவும் நான் ரசிக்கும் திரைப்படங்களில் ஒன்று. 
பிரியதர்ஷனின் மூல கதையை எடுத்து K.S.ரவிக்குமார் இயக்கிய திரைப்படத்தில் அன்புள்ள ரஜனிகாந் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மீனாவுடன் கதாநாயகனாக மீண்டும் ரஜனி இணைந்திருந்தார்.
ரஜனியின் சூப்பர்ஸ்டார் என்ற மாஸ் ஐ பாழாக்காத திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
உலகளவிற்கு ரஜனியை கொண்டு சென்ற இத்திரைப்படம் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை 1996ல் ரஜனிக்கு பெற்றுக்கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

6. தளபதி

மகாபாரத கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் இன்று பலராலும் நட்பு தொடர்பான திரைப்படங்களில் முதலில் நினைவு படுத்தப்படும் திரைப்படமாக தளபதி விளங்குகின்றது.
இரு நடிப்புலக இமாலயங்கள் இணைந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா வழங்கிய இசை தெவிட்டாதது. 

பாடல்களுக்காக ஆரம்பத்தில் என்னை கவர்ந்து பின் திரைப்பட அமைப்பிலும் என்னை பாதித்த படமாக அமைவது இந்த தளபதி.

7. படையப்பா

எல்லோருக்கும் பிடித்த ஒன்று எனக்கும் பிடித்து போவது வேடிக்கை அல்ல.. அது போலத்தான் படையப்பா திரைப்படமும்.
ரஜனியால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் எனக்கு அத்துப்படி. நடிகர் திலகத்தை இந்த தலைமுறைக்கும் நினைவு படுத்திய திரைப்படம் இது என்றாலும் தவறில்லை என்று நினைக்கின்றேன்..

படத்தில என்ன ஒரு ஸ்டைலை வெளிப்படுத்தியிருப்பார் நம்ம தலைவரு.. வயசானாலும் இன்னும் அந்த ஸ்டைல் அவரை விட்டு போகவில்லை என்பதே உண்மை..

8. பாட்ஷா.

தாதா என்ற கதாபாத்திரத்தில் இன்று பலர் துணிந்து நடிப்பதற்கு முன்னோடியாக ரஜனி நடித்து காட்டிய திரைப்படம் பாட்ஷா.
முன்னர் சொன்னது போல எல்லோர் விருப்பம் போல என்னாலும் விரும்பப்பட்ட திரைப்படம்.
வசனங்களுக்காக அதிக தடவை பார்த்து மகிழ்ந்த திரைப்படம், அதிலும் ரஜனி மிரட்டும் காட்சிகளுக்கு நான் அடிமை.

9. சிவாஜி

தன் பெயரின் பாதியையும் நடிகர் திலகத்தை நினைவு படுத்தும் விதமாகவும் சிவாஜி என்ற பெயருடன் வெளியாகி இன்று வரை வசூல் சாதனைகளின் சிகரத்தில் நிற்கும் திரைப்படம். சிகரட் பாணியை துறந்து புதிய பாணியை கையாள ஆரம்பித்த 2வது திரைப்படம். முதலாவது சந்திரமுகி.
ரஜனியின் வாயில் இருந்து பஞ் வசனங்கள் குறைவாக வெளிப்பட்ட அண்மைய திரைப்படம். என பல புதிய விடயங்களுக்காகவும் என்னை கட்டிப்போட்ட திரைப்படம்.
சிறந்த கலை இயக்குனர் எனும் தேசிய விருதை 2008 ல் தோட்டா தரணி பெற்றுக்கொள்ள காரணியாக இருந்ததும் சிவாஜி திரைப்படமே.

பாடசாலை நாட்களில் நானும் நண்பர்களும் அதிபரின் அனுமதியுடன் திரையரங்கு சென்று படம் பார்த்தது இத்திரைப்படத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது.

10. ........................ நீங்களே சொல்லுங்கள்.....!!

எல்லோரையும் போல பத்து படங்கள் என பட்டியலிட எனக்கு விருப்பமில்லை. ரஜனியின் படங்கள் பலவற்றை இப் பட்டியலில் என்னால் இணைக்க முடியாமல் போவதே பெரும் வருத்தம். இப்பதிவில் நான் ரஜனியை ஒரு ஆதர்ஷ நாயகனாக பார்த்த திரைப்படங்களை பட்டியலிட்டுள்ளேன். இன்னும் கலைஞனான, நடிகனாக, மனிதனாக, பக்தனாக என பல வடிவங்களில் ரஜனியின் முகங்களை பட்டியலிடலாம். ஆனால் நேரமும் காலமும் கைகூட வேண்டும். எனவே தற்காலிகமாக ரஜனியின் ஏனைய திரைப்படங்களினை இந்த 10 என்ற இலக்கத்தில் வைத்து ரஜனிக்கான வாழ்த்து பதிவை நிறைவு செய்கின்றேன்.
இவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா... -கவி பேரரசு வைரமுத்து



குறிப்பு :- பதிவின் தலைப்பிற்கு உதவி deccan chronicle பத்திரிகை.

..........................................................................................................................................................

பதிவில் இறுதியாக,
முன்னரே குறிப்பிட்டது போன்று நேற்று பாரதியின் பிறந்த தினம்.
பாரதியின் கவிதைகளில் நேற்று அதிகாலையில் திடீரென மனதில் நினைவுக்கு வந்தவை இரண்டு கவிதைகள்..

1. சுதந்திர தாகம்


என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே!
வென்றி தருந்துணை நின்னருளன்றோ?
மெய்யடியோம் இன்னும் வாடுதல் நன்றோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ?
தஞ்ச மடைந்த பின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம் மறந்தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனோ!
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
2. பாரத தேசம்
பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். 
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். 
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். 
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே. 
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடிவருவோம்.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் 
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம் உழு படைகள் செய் வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் 
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற் போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். 
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம் செய்வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்துமுவந்து செய்வோம்.
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். 
நல்லது நண்பர்களே...,
நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Photobucket