
பொழுதுபோக்கு என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் அறிவுபூர்வமான-மனசுக்கு நெருக்கமாகும் படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்படுகின்றன. சமீபகாலமாக தமிழ் திரையுலகின் வழக்கமான பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத் தொடங்கும் படங்களை வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது.
...